
கடந்த சில நாட்களுக்கு முன் வெங்காய ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை பாகிஸ்தான் விலக்கி கொண்டுள்ளது. இதனால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வெங்காயம் கொண்டு வருவதில் இருந்த சிக்கல் விலகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அதிக அளவில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அண்டை நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் மும்பை வியாபாரிகள் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் திடீர் தடை விதித்தது. ஆனால் அதற்கு முன்னரே இந்திய வியாபாரிகள் பலர் பாகிஸ்தான் வியாபாரிகளிடம் இருந்து ஏராளமான வெங்காயத்தை வாங்கி. லாரிகளில் ஏற்றி வாகா எல்லை மூலமாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டு வர அனுப்பி வைத்தனர்.
வெங்காய லாரிகள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் பாகிஸ்தான் வெங்காய ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்ததால் வாகா எல்லையை தாண்டும் முன் அனைத்து வெங்காயம் லாரிகளும் நிறுத்தப்பட்டன. சுமார் 300 வெங்காய லாரிகள் இப்போது பஞ்சாப் வர முடியாமல் வாகா எல்லையிலேயே நிற்கின்றன.
இதனால் லாரிகளில் உள்ள வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
வெங்காயத்துக்குப் பதில் பருத்தி -இந்தியா முடிவு
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தரை வழியாகவும் ரயில் வழியாகவும் வெங்காய ஏற்றுமதியை அனுமதித்தால் பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவோம் என்று பாகிஸ்தானிடம் இந்தியா கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரீசலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் அதற்குப் பதிலாக இந்தியாவுக்கு தரை வழியாக வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய வணிகத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது எனவே, வெங்காய விலை சற்று குறையத் தொடங்கியது ஆனால், இந்தியாவுக்குத் தரை வழியாக வெங்காயம் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஜனவரி 6ஆம் தேதி தடை விதித்ததைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலை ரூ60 முதல் ரு70உயர்ந்தது
தற்போது இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் சுமார் 3 ஆயிரம் டன் எடையுள்ள வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு 300 லாரிகள் காத்திருக்கின்றன
பருத்தி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ஜவுளித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக