வியாழன், 25 ஆகஸ்ட், 2011

சுன்னாவின் ஒளியில் பெருநாள்


அரபு மொழியில் பெருநாள் என்பதற்கு ‘ஈத்’ என்று சொல்லப்படும். உண்மையில் ஈத் என்றால் திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும். பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, மதீனாவாசிகள் ஜாஹிலிய்யாக் கால இரு பெருநாட்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதற்குப்பதிலாக அவற்றை விடச்சிறந்த இரண்டு பெருநாட்களை அல்லாஹ் உங்க ளுக்குத் தந்துள்ளான். அவை & ஒன்று அறுத்துப் பலியிடும் நாளாகிய (ஈதுல் அழ்ஹா), மற்றையது ஈதுல் பித்ர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸஈ
இந்த வகையில் ரமலான் முழுக்க நோன்பு நோற்ற பின் ஷவ்வால் மாதம் முதல்பிறை பார்த்ததும் கொண் டாடப்படும் பெருநாள் ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளாகும்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிட முன் வந்ததை நினைவு கூறும் விதமாக துல்ஹஜ் மாதம் பிறை 10ல் கொண்டாடப்படும் பெருநாளே ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளாகும்.
சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி வெள்ளிக் கிழமை தினமும் ஒரு பெருநாளாகும். இவை தவிர வேறு எந்தப் பெருநாட்களும் இஸ்லாத்தில் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும்.
பெருநாளைக் கொண்டாடுவது எப்படி—?
பெருநாட்களை அடையாளப்படுத்திய நபி (ஸல்) அவர்கள், அவற்றை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கான வழிகளையும் காட்டியுள்ளார்கள்.
புத்தாடை அணிவது
ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் சந்தையிலிருந்து பட்டாடை ஒன்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்களி டம் கொடுத்து, இதை பெருநாளைக்கும், பிரமுகர்கள் வந்தால் அணிவதற்குமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அது பட்டு என்ற காரணத்தினால் அதை வாங்க நபியவர்கள் மறுத்து விட்டார்கள். (புகாரி ஹதீஸின் சுருக்கம்)
இதிலிருந்து பெருநாளைக்குப் புத்தாடை அணிகிற வழக்கம் இருந்ததனாலேயே உமர் (ரலி) அவ்வாறு கூறினார்கள் என்பதை உணர முடிகிறது.
ஸஹாபாக்கள் புத்தாடைகளை அல்லது அவர்களிடம் உள்ள ஆடைகளில் சிறந்ததைப் பெருநாள் தினங்களில் அணிந்திருப்பதை ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.
திறந்த வெளியில் (திடலில்) பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 2ம் ஆண்டு நோன்பு கடமையாக்கப்பட்டதிலிருந்து பெருநாள் தொழுகையையும் தொழுது வந்துள்ளார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மஸ்ஜிதில் தொழுததற்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் கிடையாது. மஸ்ஜிதுந் நபவியில் ஒரு தொழுகை தொழுவது (மஸ்ஜிதுல் ஹராம் தவிர) ஏனைய பள்ளிகளில் 1000 தொழுகை தொழுவதை விடவும் சிறந்ததாக இருந்தபோதிலும் நபியவர்கள் பெருநாள் தொழுகையைத் திடலிலேதான் தொழுது வந்தார்கள். (புகாரி)
ஓர் ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று கூடி பெருநாளைக் கொண்டாடுவது பெருநாள் தினத்தை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்குவதற்கு சிறந்த வழி என்பதால் கூட நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.
மழை அல்லது திறந்தவெளி இல்லாமை போன்ற சந்தர்ப்பங்களில் பள்ளிகளில் தொழுவதில் எவ்வித குற்றமுமில்லை என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பெருநாள் தொழுகை நடைபெறும் திடலுக்கு மாதவிடாயுள்ள பெண்களும் வருகை தந்து தொழாது அங்கு அமர்ந்திருப்பதும் நபிவழியாகும். (புகாரி, முஸ்லிம்)
நோன்புப் பெருநாள் தொழுகைக்காகச் செல்லும் முன் சாப்பிடல்
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் பேரீத்தம் பழங்கள் சிலவற்றைச் சாப்பிடாமல் (தொழுகைக்குச்) செல்ல மாட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)
எனவே, நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லுமுன் பேரீத்தம் பழங்களைச் சாப்பிடுவது சுன்னத்தாகும். பேரீத்தம் பழம் கிடைக்காதபோது வேறு எதையாவது சாப்பிட்டு விட்டுச் செல்வதே சிறந்தது.
தக்பீர் சொல்வது
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று தமது வீட்டை விட்டுப் புறப்படுவதிலிருந்து தொழும் இடம் வந்து தொழுகையை முடிக்கும் வரை தக்பீர் சொல்பவர்களாக இருந்தார்கள்
ஆதார நூல்: முஸன்னப் இப்னு அபீ ஷைபா
ஆண்கள் சப்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் தக்பீர் சொல்ல வேண்டும். கூட்டமாக தக்பீர் சொல்வது நபிவழிக்கு முரணான ஒரு செயலாகும்.
தக்பீர் எவ்வாறு அமைய வேண்டுமென்பது பற்றி எவ்வித நபிமொழிகளும் காணப்படவில்லை. தக்பீர் என்றால் பொதுவாக ‘அல்லாஹ§ அக்பர்’ என்று கூறுவதையே குறிக்கும். எனவே ‘அல்லாஹ§ அக்பர்’ என்று கூறிக் கொண்டால் போதுமானது.
இருப்பினும், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் “அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ§ வல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர் வலில்லாஹில் ஹம்து” என்று தக்பீர் கூறியுள்ளார்கள். (ஆதார நு£ல்கள்: தாரகுத்னீ, இப்னு அபீ ஷைபா. பார்க்க: இர்வாஉல் கலீல் (6501))
மேலும் ஸல்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பரு கபீரா” என்று (தக்பீர்) கூறி இருக்கிறார்கள் (ஆதார நு£ல்கள்: முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக், பைஹகீ)
இவற்றிலிருந்து ஒருவர் அல்லாஹ§ அக்பர் என்பதை விட அதிகமாக மேற்கூறப்பட்டவாறு கூறினால் அதில் தவறில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தொழுகைக்காக நடந்து செல்வது
பெரும்பாலும் நபியவர்கள் பெருநாள் தொழுகைக்கு நடந்தே சென்றுள்ளனர். (திர்மிதி, இப்னு மாஜா)
தொழுகை நடைபெறும் இடம் து£ரத்தில் இருப்பின் அங்கு வாகனங்களில் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.
செல்லும்போது ஒரு வழியில் சென்று, திரும்பும்போது வேறு வழியில் திரும்புவது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையிலிருந்து (திரும்பும் போது சென்ற வழியாக இல்லாமல்) வேறு வழியாகத் திரும்புவார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
பெருநாளன்று குளிப்பது
பெருநாள் தினத்தில் குளிப்பது நபி வழி என்பதை அறிவிக்கக்கூடிய எந்த வித ஹதீஸ்களும் காணப்படவில்லை. இருந்தும் இப்னு உமர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் குளித்துள்ளதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் காணப்படுகின்றன.
பெருநாள் தொழுகையின் முறை
பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். அதற்கு முன்னரோ, பின்னரோ எவ்வித தொழுகையும் கிடையாது. மேலும் பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தன்று 2 ரக்அத்துக்கள் தொழுதார்கள். அதற்கு முன்னரோ, பின்னரோ எதையும் தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)
நபி (ஸல்) அவர்களுடன் ஒரு முறையல்ல, இரு முறையல்ல (பல முறை) பாங்கும், இகாமத்தும் இல்லாமல் (பெருநாள் தொழுகையைத்) தொழுதுள்ளேன் என்று ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
‘அஸ்ஸலாது ஜாமிஆ’ போன்ற வார்த்தைகளைக் கூறுவதற்கும் ஆதாரங்கள் கிடையாது. எனவே நேரடியாகத் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.
முதல் ரக்அத்தில் ஆரம்ப தக்பீர் கட்டிய பின்பு 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின் தக்பீர் இல்லாமல் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். (அபூதாவூத் இப்னு மாஜா)
ஒவ்வொரு தக்பீருக்கும் இடையில் கைகளை உயர்த்திக் கட்டுவதற்கு ஆதாரங்கள் கிடையாது. மேலும் அவற்றுக்கு இடையில் கூறுவதற்கு என்று எந்தவித வாசகங்களும் ஹதீஸ்களில் வரவில்லை. இவை தவிர ஏனைய செயல்கள் மற்ற தொழுகைகள் போன்றே அமையும்.
தொழுகை முடிந்த பின்னர் ஒரு குத்பாப் பிரசங்கம் இடம்பெறும். அதற்கு மிம்பர் அவசியமில்லை. மேலும் அந்த குத்பா ‘ஹம்து ஸலவாத்தை’க் கொண்டே ஆரம்பிக்கப்பட வேண்டும். தக்பீரைக் கொண்டு ஆரம்பிப்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது.
குத்பாவைக் கேட்பதே சிறந்ததாகும். கேட்க விரும்பாதோர் கலைந்து செல்வதற்கு அனுமதியுள்ளது.
நிச்சயமாக நாங்கள் குத்பா ஓதுகிறோம். அதைக் கேட்பதற்காக இருக்க விரும்புவோர் இருக்கலாம். செல்ல விரும்புவோர் செல்லலாம் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, ஹாகிம்)
பெருநாள் தொழுகை வெள்ளிக் கிழமை தினத்தில் வந்தால் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியவர் விரும்பினால் ஜும்ஆ தொழுகைக்கு வரலாம். விரும்பினால் வராமல் இருக்கலாம்.
இன்றைய நாளில் இரு பெருநாட்கள் வந்துவிட்டன. யார் விரும்புகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை ஜும்ஆவுக்குப் போதுமானதாகும். இன்ஷா அல்லாஹ் நாம் இரண்டையும் தொழுவோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹ§ரைரா (ரலி), நு£ல்: அபூதாவூத், இப்னுமாஜா
பெருநாள் தினத்தில் தவிர்க்க வேண்டியவை
பெருநாள் மகிழ்ச்சியான தினமாகும். இஸ்லாம் அனுமதித்த முறையில் மகிழச்சியாகவும், சந்தோஷமாகவும் பெருநாளைக் கொண்டாட வேண்டும் அந்நாளிலும் இஸ்லாமிய வரையறைகளைத் தாண்டுவது ஹராமாகும். இந்த வகையில் சிலர் மார்க்கத்தின் பெயரால் அன்றைய தினம் அடக்கஸ்தலங்களை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். பொதுவாக மண்ணறைகளைத் தரிசிப் பது ஆர்வமூட்டப்பட்டிருந்தாலும், பெருநாள் தினங்களில் குறிப்பாக அவ்வாறு செய்வது ஆதாரமற்றதாகக் காணப்படுகிறது.
நல்லமல்களைத் தொடர்ந்து, நல்லமல்கள் செய்வது அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாகும். இருந்தும் பெரும்பாலான சகோதரர்கள் ரமலான் முழுக்க நோன்பு நோற்று, இரவு வணக்கங்களில் ஈடுபட்டு பெருநாள் தினத்தில் இஸ்லாம் தடை செய்த சினிமா, சூதாட்டம் மற்றும் வீணான கேளிக்கைகள் போன்றவற்றில் நேரங்களை விரையமாக்குவது தடுக்கப்பட வேண்டிய செயல்களாகும்.
சிலர் வீண் விரயங்களில் ஈடுபடுகின்றனர். பெருநாள் தினமாக இருந்தாலும் அல்லது வேறு தினங்களாக இருந்தாலும் வீண் விரயம் செய்வது ஹராமாகும். வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் தோழர்களாவர்.
இன்னும் சிலர் பெருநாள் தினங்களில் பர்ழான தொழு கைகள் விஷயத்தில் பொடுபோக்காகக் காணப்படுவர். எந்தச் சந்தர்ப்பதிலும் தொழுகையை விடுவதற்கோ, உரிய நேரத்தை விட்டு பிற்படுத்துவதற்கோ மார்க்கத்தில் அனுமதி கிடையாது.
எனவே, ரமலானில் நோன்பு நோற்று இன்ன பிற வணக்கங்களில் ஈடுபட்ட நாம் நமது பெருநாளையும் இஸ்லாமிய வரையறைகளுக்குள் சுன்னாவின் ஒளியில் அமைத்துக் கொள்வோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமுமுக துபை மண்டலம் Headline Animator

LinkWithin

Related Posts with Thumbnails

குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!