புதன், 16 ஏப்ரல், 2014

நக்கீரனில் நமது பொதுச்செயலாளர்

                          
                                        இன்றைய நக்கீரனில் நமது பொதுச்செயலாளர்



நாட்டை வழி நடத்தவும், மக்களுக்கு சேவை யாற்றவும், அரசியல் களம் இன்றியமையாததாக இருக்கிறது. இன்றைய அரசியல் என்பது வணிகம், சுயநலம், சாதியம், மதவாதம் போன்ற அழுக்குகளால் சூழப்பட்டுள்ள நிலையில்; சேவை சார்ந்த அரசியலை முன்னெடுத்து, 

தத்துவங்களை மையப்படுத்தி 2009 பிப்ரவரி 7 அன்று மனித நேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் ஜனநாயக உரிமைகளை முழங்கியும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை வழிநடத்தியும் எமது மனிதநேய அரசியலை செயல்படுத்தி வருகிறோம்.

கொள்கை சார்ந்த நெறிமுறைகளின் வழியாக எமது தொண்டர்களை மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளாக வார்த் தெடுக்கிறோம். "மக்களைத் திரட்டு -அரசியலை மாற்று'’’என முழங்குகிறோம்.

அரசியல் வழிகாட்டி முகாம்கள், பண்பு பயிற்சி முகாம்கள், பேச்சாளர் பயிற்சி முகாம்கள் நடத்தி ஒவ்வொரு தொண்டரையும் ஒரு தலைவரைப் போலவும்; ஒவ்வொரு தலைவரையும் ஒரு தொண்டரைப் போலவும் பக்குவப்படுத்தி அவர்களை களமாட அனுப்புகிறோம்.

நாங்கள் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதில்லை. மாறாக, தத்துவங்களை முன்னிலைப் படுத்துகின்றோம். தனிநபர் துதி பாடலைத் தவிர்த்து, கூட்டுத் தலைமையை முன்மொழிகிறோம். எமது மனிதநேய அரசியல் என்பது குரலற்ற மக்களின் குரலாகவும்; தலைமைத்துவம் இல்லாத சமூகங்களின் தலைமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதன் விளைவாகவே, வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமூகத்தின் இதயத் துடிப்பாகவும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக் குரலாகவும், நசுக்கப்படும் தொழிலாளர்களின் போர்க் குரலாகவும், ஒடுக்கப்படும் மக்களின் இடிமுழக்கமாகவும் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கைகள் இருக்கின்றன.

முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட்டம், காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வுரிமைக் களம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் எழுச்சி, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புக்கு எதிரான கலகங்கள், கல்பாக்கம் அணு மின்நிலைய எதிர்ப்பு யுத்தம், நாகை மாவட்டத்தில் அனல் மின் நிலையங்களுக்கு எதிரான கிளர்ச்சி,

ஆற்று மணல் கொள்ளைகளுக்கு எதிரான அறப்போர் -என தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களில் தீவிரமாய் களமாடிவரும் வரலாறு எமக்கு இருக்கிறது. அதுமட்டு மல்லாமல்,

ஈழத்தமிழர் விவகாரத்தில் கட்சி தொடங்கிய நாள் முதல் ஒரேநிலைப்பாட்டில் சமரசமின்றி அம்மக்களுக்காக மனிதநேய மக்கள் கட்சி போராடி வருவதில் எங்களுக்கு மன திருப்தி உண்டு.

2009 நாடாளுமன்றத் தேர் தலின்போது, ‘இலங்கையில் ஈழத் தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்றொழித்த சர்வாதிகாரி ராஜபக்சேவை, சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்’என முதல் குரலை மனிதநேய மக்கள் கட்சிதான் எதிரொலித்தது. ஆம்! மற்றவர்கள் தாமதமாய் சிந்திக்கும் யாவற்றையும், முன்கூட்டியே பிரகடனம் செய்வதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் தனித்துவ அரசியலாகும்.

புலிப்படை தலைவர் பிரபா கரன் அவர்களின் மகன் பாலச் சந்திரன், சிங்கள பேரினவாத ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட துக்க செய்தி உறுதியானபோது; உலகத் தமிழர்கள் விம்மி அழுதபோது; உலக அளவில் முதலில் களமிறங்கி, சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூத ரகத்தை முற்றுகையிட்டு; எதிர்ப்பை பற்றவைத்த துணிச்சல் பலரும் வியந்த ஒன்றாகும்.

ஃபாஸிஸம், சாதியவெறி, மதவெறி, வன்முறை, தீவிரவாதம் உள்ளிட்ட மக்கள் விரோத செயல் பாடுகளுக்கு எதிராக மக்களை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு அரசியலை பொறி பறக்க பரப்புரை செய்வதில் நாங்கள் எப்போதும் முன்னிலை வகிக்கிறோம். தோழமை யை உயிராக மதிப்பதும்; பகைமை யைக் கூட பக்குவமாக எதிர் கொள்வதும் நாங்கள் பின்பற்றும் பொதுவாழ்வின் இலக்கணமாகும்.

இந்தியாவின் ராஜபக்சே வாகத் திகழும் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; இலங்கையின் நரேந்திரமோடியாகத் திகழும் ராஜபக்சேவை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; நீதியின் நெறிபிறழாமல் எதிர்ப்பதே எம் கொள்கையாகும்.

உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் எமது சொந்தங்களாகும். அந்த வழியிலேயே இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினரில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக் களங்களில் முதல் நிலை வீரர்களாய் அணிவகுக்கின்றோம். அதேபோல் கிறித்தவர்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மையினரின் நலன்களுக்காகவும் போராடுகிறோம்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான கட்சி அல்ல. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட, பெரும் பான்மை சமூகங்களையும் அங்கத்தினர்களாகக் கொண்ட ஒரு ஜனநாயகப் பேரியக்கமாகும்.

மதச் சார்பின்மைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விளக்கங்கள் உண்டு. மதம் சார்ந்த நிலைகளிலிருந்து முற்றிலு மாக விலகியிருக்கும் கொள்கைதான் மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் மதச் சார்பின்மையாகும். ஆனால் நாம் முன்வைக்கும் மதச்சார்பின்மை என்பதற்கான அர்த்தம்,

அனைத்து மதத்தினருக்கும் மத்தியில் பொது ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதும், அதன்வழியே சிறுபான்மையினரின் வாழ்வுரிமைகளைக் காப்பது என்பதுமாகும். அதன் ஊடாகவே எமது அரசியல் பயணம் தொடர்கிறது.

மாற்று அரசியலுக்காகக் குரல் கொடுக்கும் நாங்கள், களங்களில் சமூக நீதிக்காகவும்; சமூக நல்லிணக்கத்திற்காகவும்; சில சமயங்களில், சில சமரசங்களை செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. இந்திய ஜனநாயக சூழலில் அரசியலையும், கொள்கைகளையும் கவனமாக ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளாதவாறு கையாள வேண்டியிருக்கிறது.

நாங்கள் பாதைகளை மாற்றுவதில்லை; ஆனால் குதிரைகளை மாற்றுவதுண்டு. எமது அரசியல் பயணத்தில் நாங்கள் விமர்சனங்களுடன் கூடிய, தோழமைகளைப் பேணுகிறோம். அது ஆரோக்கியமான அரசியலுக்கும், தூய்மையான நட்புக்கும் வழிகாட்டுகிறது.

திராவிட இயக்க சிந்தனைகள், தமிழ் தேசிய சிந்தனைகள், இடதுசாரி - முற் போக்கு சிந்தனைகள் ஆகியவற்றோடு எப்போதுமே நட்பு பாராட்டும் அரசியலை முன்னெடுக்கிறோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு பெருநிறு வனங்களின் சுரண்டல், கட்டுப்பாடற்ற கலாச்சார சீரழிவுகள்,

இயற்கை -சுற்றுச் சூழலுக்கு எதிரான பன்னாட்டு சூழ்ச்சிகள் என உலக அரசியலையும் பேசுகிறோம். வணிக அரசியல், தேர்தல் சீர்திருத்தம், சிறுபான்மையினருக்கு எதிரான சதிகள், தலித்துகள் -பழங்குடிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், அரச வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் என உள்நாட்டு அரசியலையும் பேசுகிறோம்.

ஊழலின் நிழலைக்கூட நெருங்கக்கூடாது என்கிற உன்னத லட்சியத்தோடு, அரசியலை மாபெரும் சேவைக்கான களமாக கருதும் எண்ணங்களோடு எமது களப்பணிகள் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆலை முதலாளிகளும் பண்ணை ஜமீன்களும் பன்னாட்டு பண முதலைகளும் இந்திய அரசியலை ஆக்கிரமித்து வரும் சூழலில் மனசாட்சியுள்ள குடிமக்களை நம்பியே எங்களின் அரசியல் இருக்கிறது.

தூய்மையான எண்ணங்களோடும் நேர்மையான அணுகுமுறைகளோடும் உயர்வான கொள்கைகளுடனும் கண்ணியமாக அரசியல் பணியாற்ற துடிக்கும் மனிதநேய மக்கள் கட்சியை வலிமையாக்க எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

ஆற்றலும் அறிவும் நேர்மையும் கொண்ட அடித்தட்டு மக்கள் யாவரும் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரலாம் என்கிற சுதந்திர விதிகளைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அதிகாரத்தில் வலிமை பெற வர விரும்புகிறது. ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தை எளியவர்களுக்கும் விரிவுபடுத்தவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தோள்கொடுங்கள் என உரிமையோடும் உணர்வோடும் கேட்கிறோம்.

தற்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர் களுடனும், நூற்றுக்கணக்கான உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடனும் ஊழலற்ற; நேர்மையான மக்கள் பணியை செய்துவரும் நாங்கள், இப்போது நாடாளுமன்றத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் முதுபெரும் தலைவர் டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.க., முஸ்லிம்லீக், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் அங்கம் வகிக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியினர், போர்வீரர்களாக களத்தில் நிற்கின்றனர்.

எமக்கு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு இறைவன் அருளால் நாங்கள் பெறக்கூடிய வெற்றி எமது அரசியலில் திருப்புமுனைகளையும், புதிய நம்பிக்கையையும் தரும் என எதிர்பார்க்கிறோம்.

ஐயா பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், பெருந்தலைவர் காமராஜ், ஐயா முத்துராமலிங்கத்தேவர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார், தோழர் ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் பக்குவப்படுத்திய தமிழ்மண்ணில் ‘வட இந்திய அரசியல் கலாச்சாரம்’ ஃபாசிச வடிவில் வேர்விடத் துடிப்பதை எதிர்க்கிறோம்.

இன்று தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், புதிய தமிழகம் உள்ளிட்ட சமூக நீதிக் கட்சிகளின் அணியில் மனிதநேய மக்கள் கட்சி முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கூட்டணியை புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யும் உத்திகளோடு புறப்பட்டிருக்கிறோம்.

எமது கொள்கை அரசியலை ஏற்று நாடே எங்கள் பின்னால் அணிவகுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்று விதைகளைத் தூவுகிறோம்; நாளை வரும் தலைமுறைகள் அதை அறுவடை செய்யும் என நம்புகிறோம்.

நாங்கள்தான் அடுத்த ஆட்சியைக் கைப்பற்று வோம் என்று கூறவில்லை. ஆனால், நாங்கள் இல்லாமல் எந்த ஆட்சியும் இல்லை என்பதை அழுத்திச் சொல்கிறோம்.

எளிய மக்கள் அரசியல் அதிகாரத்தில் வலிமை பெறவேண்டிய கொள்கைப் பிடிப்புடனும், லட்சிய வேட்கையுடனும் தேர்தல் களத்தில் நிற்கும் மனிதநேய மக்கள் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை



நன்றி:-  நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமுமுக துபை மண்டலம் Headline Animator

LinkWithin

Related Posts with Thumbnails

குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!