சனி, 7 மே, 2011

அதிர்ச்சியில் இஸ்ரேல்!

குண்டுகளின் மழையில் தீக்குளித்த தியாக பூமியான பாலஸ்தீனத்தின் சமீபத்திய சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது.

1948ல் வஞ்சகமாய் வளைகுடாப் பகுதியில், மேற்கு சக்திகளால் வ­ந்து திணிக்கப்பட்ட இஸ்ரேல் என்ற செயற்கை அரசு பாலஸ்தீனப் பகுதிகளை அபகரித்து மண்ணின் மைந்தர் களான பாலஸ்தீனர்களை நாடற்ற அகதிகளாக்கியது. வல்லரசுகளின் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டத்தை இரக்கமற்று நசுக்கியது இஸ்ரேல்.

யாசர் அராபத் எனும் தியாகத் தலைவன் பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தார். பாலஸ்தீன விடுதலை முன்னணி (பி.எல்.ஓ) உருவானது. விடுதலைப் போராட்டம் வலுவடைந்தது. அதே வேளையில் இஸ்ரேலும் வ­லிமைமிக்க சக்தியாக மாறியது.
நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் தனது மக்களுக்காக சமாதான உடன்பாட்டுக்கும் உடன்பட்டார் அராபத். 1993ல் இஸ்ரேலி­ய சக்திகளுடன் உடன்பாடு செய்து கொண்டார். சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் இஸ்ரே­லின் ராஜ வியூகத்தை உடைத்தார். மிதவாதிகளிடம் செல்வாக்கு ஏறுமுகமாய் சென்றாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடைய மக்களிடம் தனது மதிப்பை அவர் இழக்க வேண்டிய தாயிற்று.

காலமெல்லாம் களத்தில் நின்றார். ராஜதந்திர ரீதியில் மேற்குலக சூழ்ச்சிகளை சுட்டெரித்தவரின் புகழ் ஒளி கொஞ்சம் மங்கத்தான் செய்தது. இருப்பினும் தனது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் விழுப்புண்களுடன் விழாமல் போராடினார். தாளத்துக்கு தலையாட்டாத ஆத்திரத்தில் இஸ்ரேல் அரசு அரபாத் தின் அலுவலகத்தின் மீதே குண்டு வீசியது. மிருகத்தனமாக மின் இணைப்பை கூட துண்டித்தது. தனது மக்களின் துன்பம் கண்டு மெழுகாய் உருகிய அந்த மனிதன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மக்கள் பணி ஆற்றினார். வஞ்சகத்தையே வாழ்க்கை பாதையாக கொண்டிருந்த யூதர்கள் மெல்ல மெல்ல கொல்லும் நஞ்சினை ஊட்டி படுகொலை செய்தனர். அராபத் மறைந்தார். ஆனால் ஃபதாஹ் மறையவில்லை. ஏதோ தானும் இருக்கிறேன் என்பதைப் போல அதன் செயல் பாடுகள் மந்த கதியில் இயங்கியது.

ஃபதாஹ் இயக்கத்தின் கூர்மை குறைந்த செயல்பாடுகளால் ஹமாஸ், பாலஸ்தீன அரங்கில் உதித்தது. அராபத்தின் காலத்திலே இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்த இயக்கமாக ஹமாஸ் உருவெடுத்தது. உலகெங்கும் வாழும் விடுதலைப் போராளிகளின் ஞானத் தந்தையான ஷேக் அஹ்மது யாசின் இளைஞர்களை வார்த்தெடுத்தார். ஹமாஸின் எழுச்சி, யூத ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தியது. வஞ்சகமாய் குண்டு வீசிக் கொன்றது. தொடர்ந்து வந்த ஹமாஸ் தலைவர் அப்துல் அஜீஸ் ரந்திஸியையும் படுகொலை புரிந்தது. ஹமாஸ் தனது உரிமைப் போராட்டத்தினை சளைக்காமல் முன்னெடுத்தது.மேற்குலகும் இஸ்ரேலும், இந்த சக்திகளின் அடியொற்றி செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஹமாஸை பயங்கரவாத இயக்கம் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், நெஞ்சுருத்துடன் ஹமாஸ் ஜனநாயகப் பாதைக்குள் நுழைந்தது. அதன் அரசியல் ராஜதந்திரியுமான ஹா­த் மிஷால் இஸ்ரேலி­ன் சதிச் செயலை முறியடிக்கவும் தன்னை தற்காத்துக் கொள்ளவும், தற்போது சிரியாவில் வாழ்ந்து வருகிறார்.

ஹா­லித் மிஷாலை கொலை செய்ய இஸ்ரேல் பலமுறை முயற்சிகளை மேற் கொண்டது. இறையருளால் அவர் இன்று வரை உயிர் பிழைத்து தனது மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் போராடி வருகிறார். சரி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய ஹமாஸ் நாடாளுமன்றத் தேர்தலில் குதித்தது, பெருவாரியான வெற்றியும் பெற்றது. இஸ்மாயில் ஹனியா தலைமையில் அமைச்சரவை அமைத்தது. ஓர் நிழல் இயக்கம் ஜனநாயகப் பாதைக்கு வந்ததை வரவேற்க மனமின்றி அமெரிக்காவும், இஸ்ரேலும், மேற்குலகும் ஹமாஸிற்கு வாக்களித்த மக்களுக்கு பொருளாதார உதவிகளை முடக்கி பட்டினியில் தள்ளியது. வறுமையின் பிடியில் தள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஏனென்று கேட்க யாருமற்ற நிலையில் ஈரான் நிதியுதவி புரிந்தது. அது எப்படியோ பாலஸ்தீன அரசுக்கு போய்ச் சேர்ந்து விட்டது எனினும், பிற நிதி உதவிகள் யூத சக்திகளால் முடக்கப்பட்டன. அரசு ஊழியர் களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாமல் புதிதாகப் பதவியேற்ற ஹமாஸ் அரசு தவித்தது.


ஃபதாஹ் இயக்கத்துக்கும், ஹமாஸுக்கும் மோதல் வேறு ஏற்பட்டது. அரபுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நடுநிலை யாளர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். இதற்கிடையில் ஃபதாஹ், ஹமாஸ் மோத­லில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ப­லியாக உலக மக்களின் மன வேதனை அதிகமாகியது. ஏகாதிபத்திய சக்திகள் மகிழ்ச்சியில் கூத்தாடினர்.

அனைத்துக்கும் முடிவுரை எழுதும் முகமாக பாலஸ்தீனத்தில் சகோதர யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

ஹமாஸ் நிர்வாகத்தில் உள்ள காசா மீது கடுமையான மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் பிரயோகித்தது. அதனை உலக நாடுகள் மற்றும் நடுநிலையாளர்கள் கடுமையாக கண்டித்தனர். இவ்வாறு வேதனை செய்திகளே பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்த சூழலில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற இருக்கும் பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பதாஹ், ஹமாஸ் இரண்டு இயக்கங்களும் கூட்டாக அரசமைக்க ஓர் ஒற்றுமை ஒப்பந்தம் எட்டியிருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன.

இதன் மூலம் ஹமாஸ் பதாஹ் இடையே நிலவி வந்த நான்காண்டு பிணக்குகள் தேர்ந்து இணக்கம் நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சமாதான ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதும் வாகனங்களில் சென்றவர்கள் தங்கள் வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரம் ஒலிக்கச் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.பதாஹும் ஹமாசும் ஒரு தாய் மக்கள் இனி வேறுபாடு கிடையாது என முழங்கினர். தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் உணவகங்களில் தேநீர் காபி மற்றும் பழரசங்கள் இலசமாக சாலைகளில் சென்றோருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

இதற்கு நேர்மாறாக, இஸ்ரேல் தரப்பில் விரக்தியும் ஆத்திரமும் பொங்கி வழிந்தது.பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வெளிப் படையாக தனது எரிச்சலை வெளிப்படுத்தி னார். பாலஸ்தீன நிர்வாகம் அமைதி யை விரும்புகிறதா அல்லது ஹமாஸை விரும்புகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்த பதாஹ் நிர்வாகி ஒருவர், இஸ்ரேல் அமைதியை விரும்புகிறதா? அல்லது இனவெறியை நிலை நிறுத்த பாலஸ்தீன மக்களின் நிலத்தில் குடியிருப்புகளை மேலும் மேலும் உருவாக்க விரும்புகிறதா? என்று வினவினார்.

இஸ்ரேல் ஹமாஸை அங்கீகாரம் செய்யவில்லை; ஹமாஸ் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இது பாலஸ்தீன அரசியல் அரங்கில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளி ஹோஸ்னி முபாரக் வீழ்த்தப்பட்ட பிறகு இஸ்ரேலுக்கு ராஜதந்திர ரீதியில் கிடைத்த மிகப்பெரிய அடியாக இது கருதப்படுகிறது. காரணம் இந்த ஒற்றுமை ஒப்பந்தத்தில் எகிப்து அரசு முக்கியப் பங்கு வகிக்கிறது. எகிப்தின் வெளியுறவு அமைச்சர் சென்றவாரம் பாலஸ்தீன நகரான ரமல்லாவில் மஹ்மூத் அப்பாஸை சந்தித்து உடன்பாடு எட்டப்பட முக்கியப் பங்காற்றினார்.

இந்நிலையில் இஸ்ரேலிய நிதி அமைச்சர் யுவால் ஸ்டை நிட்ஸ் செய்த ஒரு தகாத காரியம் பாலஸ்தீன மக்களின் கொதிநிலையை அதிகரித்துள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு சேர வேண்டிய88 மில்லியன் அமெரிக்க டாலர்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. 2001 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீன அத்தாரிட்டிக்காக வருடம் தோறும் 100 கோடி டாலர்கள் இஸ்ரேல் வரி வசூல் செய்யவேண்டும். அதன்படி இஸ்ரேல், கஜானாவில் இருந்த நிதியினை முடக்கி வைத்துள்ளது. இந்த நிதி இறுதியில் பயங்கரவாத (?) ஹமாஸ் அமைப்புக்கு தான் செல்லும், எனவே இதனை முடக்க வேண்டியதாயிற்று என்று இஸ்ரேல் சப்பைக் கட்டு கட்டியுள்ளது.

இஸ்ரேலின் இது போன்ற அச்சுறுத்தல்கள் சமாதான முயற்சிகளை முடக்கி வைத்துவிட முடியாது என பாலஸ்தீன பிரதமர் சலாம் ஃபாயத் தெரிவித்திருக்கிறார்.

இது அப்பட்டமான வழிப்பறி என பாலஸ்தீன விடுதலைப் போராட்ட அமைப்பின் நிர்வாகக் குழு கண்டித்துள்ளது.

இஸ்ரேல் தனது போரை புதிய பாணியில் தொடங்கியுள்ளது. அதனை பாலஸ்தீன மக்கள் ஒன்றுபட்டு முறியடிப்பார்கள் என ஹமாஸ் அறிவித்திருக்கிறது.

-அபுஸாஸிஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமுமுக துபை மண்டலம் Headline Animator

LinkWithin

Related Posts with Thumbnails

குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!